;
Athirady Tamil News

நாட்டில் 18 பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் 18 பாடசாலைகளுக்கு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை மருத்துவ சங்கம் நேற்று (30) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் அனோஜா தீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் கீழ் 257 பாடசாலைகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், 131 பாடசாலைகள் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டதாகவும், இது 51 சதவீதமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நுளம்பு பரவல்கள் உள்ள 37 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டதாகவும், இது 14.4 சதவீதமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவுடன் இணைந்து, மே 19 முதல் 24 வரை 15 மாவட்டங்களில் 95 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு சிறப்பு நுளம்பு கட்டுப்பாட்டு திட்டத்தை செயல்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.