;
Athirady Tamil News

களுத்துறையில் மோதலில் ஈடுபட்ட நபர் மீது துப்பாக்கிச்சூடு

0

களுத்துறையில் மோதலில் ஈடுபட்ட நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறை தர்கா நகரில் இன்று (29) பிற்பகல் இந்த துப்பாக்கிச்கூடு இடம்பெற்றுள்ளது. வழக்கு ஒன்றை விசாரிப்பதற்காக சென்றிருந்த வேளையில் நபரொருவர் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்டுள்ளார்.

மோதலில் ஈடுபட்ட நபரொருவரை இலக்கு வைத்து அளுத்கம பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். எனினும் துப்பாக்கிச் சூட்டின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.