;
Athirady Tamil News

பெலாரஸ் வழியாக ரஷ்யாவிற்குள் நுழைந்த குழு: வெளிநாட்டினர் 39 பேருக்கு தடை

0

போலந்து இராணுவ கல்லறைக்கு வந்த 39 போலந்து நாட்டவர்களுக்கு ரஷ்ய அதிகாரிகள் நுழைவதைத் தடை செய்தனர்.

படுகொலை
1940ஆம் ஆண்டில் சோவியத் ரகசிய பொலிஸாரால் போலந்து அதிகாரிகள் மற்றும் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட இரண்டாவது பாரிய இடமாக The Mednoye நினைவு வளாகம் உள்ளது.

2000ஆம் ஆண்டில் ரஷ்யாவும், போலந்தும் இணைந்து அங்கு போர் கல்லறையைத் திறந்தன.

இந்த நிலையில், கிரெம்ளின் ஆதரவு ஊடகங்கள் நினைவு வளாகத்திற்குள் போலந்தைச் சேர்ந்தவர்கள் நுழைந்ததாகவும், அவர்களை காவல்துறை கைது செய்ததாகவும் செய்தி வெளியிட்டன.

மொத்தம் 39 பேர் மீது அங்கீகரிக்கப்படாத நுழைவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பெலாரஸ் வழியாக ரஷ்யாவிற்குள்
ஏனெனில், அவர்கள் அனைவரும் பெலாரஸ் வழியாக ரஷ்யாவிற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் போலந்து மோட்டார் சைக்கிள் சாரதிகள் சங்கமான Stowarzyszenie Kocham Polske, கடந்த புதன்கிழமை கல்லறையில் ஒரு பிரார்த்தனை மற்றும் திருப்பலியை ஏற்பாடு செய்ததாகக் கூறியது. ஆனால் எந்த கைதுகளையும் குறிப்பிடவில்லை.

அத்துடன் நினைவு வளாகத்தில் தீப்பந்தங்களை வைத்திருக்கும் பைக்கர்களின் புகைப்படங்களையும் அது பகிர்ந்துகொண்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.