;
Athirady Tamil News

லெபனானின் திரிப்போலியில் ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!

0

லெபனானின் வடக்கு நகரமான திரிப்போலியில் (Tripoli) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் தளபதி வாசிம் அத்தல்லா அலி (Wasim Attallah Ali) கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இஸ்ரேலிய கடற்படை வீரர்கள் இந்தத் தாக்குதலை முன்னெடுத்ததாகவும், கொல்லப்பட்ட அலி ஹமாஸ் போராளிகளுக்குப் பயிற்சி அளிப்பதில் முக்கியப் பங்காற்றியவர் என்றும் டெலிகிராம் வாயிலாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்குப் புறநகர்ப் பகுதி
இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து ஹமாஸ் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு பதிலும் அளிக்கப்படவில்லை.

லெபனான் மீதான தனது தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வரும் நிலையில், இன்றைய தினத்தில் மட்டும் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டிருந்த நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பிற்காக இந்த திரிப்போலி நகரை நோக்கியே இடம்பெயர்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது மக்கள் தஞ்சமடைந்திருக்கும் பகுதியிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமையால் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.