;
Athirady Tamil News

இங்கிலாந்தை விட சோமாலியா பாதுகாப்பானது; கண்ணீர்விடும் ஏதிலி!

0

பாதுகாப்புத் தேடி இங்கிலாந்திற்கு வந்த சோமாலியாவைச் சேர்ந்த அகதி ஒருவர், “தயவுசெய்து என்னை மீண்டும் சோமாலியாவுக்கே திருப்பி அனுப்பிவிடுங்கள்.

இந்த நுனாட்டன் நகரை விட என் நாடு மிகவும் பாதுகாப்பானது” என அதிகாரிகளிடம் கெஞ்சிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் மிட்லாண்ட்ஸ் பகுதியில் உள்ள சிறிய நகரமான நுனாட்டனில் (Nuneaton), புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

மனிதாபிமான அமைப்புகள் கவலை
இந் நிலையில், சோமாலியாவில் இருந்து , இங்கிலாந்திற்கு வந்தவர் விடுத்த கோரிக்கை இங்கிலாந்து முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நுனாட்டன் (Nuneaton) நகரில் உள்ள ஹோட்டல்களில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உள்ளூர் மக்கள் மற்றும் சில குழுக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால், அங்கு தங்கியிருக்கும் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மத்தியில் கடும் அச்சமும், பதற்றமும் நிலவுகிறது.

இந்த விரோதமான சூழலைத் தாங்க முடியாத சோமாலிய அகதி ஒருவர், அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது,

“நான் இங்கு பாதுகாப்பிற்காக வந்தேன். ஆனால், இங்குள்ள மக்களின் வெறுப்பும், தொடர்ச்சியான போராட்டங்களும் என்னை ஒவ்வொரு நாளும் அச்சுறுத்துகின்றன.

போரினால் பாதிக்கப்பட்ட என் சொந்த நாடான சோமாலியாவே, இந்த ஊரை விடப் பாதுகாப்பானதாக நான் உணர்கிறேன். தயவுசெய்து என்னை இங்கிருந்து அனுப்பிவிடுங்கள், என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு காலத்தில் பாதுகாப்பு மற்றும் புகலிடத்தின் அடையாளமாக விளங்கிய பிரிட்டனில், அகதி ஒருவர் தன்னை மீண்டும் ஒரு போர் முனைக்கே அனுப்புமாறு கெஞ்சும் சம்பவமானது புலம்பெயர்ந்தோருக்கு எதிரான மனநிலையின் தீவிரத்தை காட்டுவதாக மனிதாபிமான அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.