;
Athirady Tamil News

நிவாரண மையங்களுக்கும் பாதுகாப்பு கிடையாது! – இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை

0

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியில், மருத்துவமனைகள் தவிா்த்து நிவாரண மையங்கள் உள்ளிட்ட மற்ற எந்தப் பகுதிக்கும் தங்கள் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடையாது என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.

இது குறித்து நிவாரண அமைப்புகளிடம் ராணுவம் கூறியுள்ளதாவது: காஸா சிட்டியில் மருத்துவமனைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட இடங்களாகக் கருதப்படும். எனவே, மற்ற அனைத்து நிவாரண உள்கட்டமைப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாகலாம். எனவே, அங்கிருந்து அனைவரும் உடனடியாக வெளியேறவேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.

ஏற்கெனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று எச்சரித்துள்ள இஸ்ரேல் ராணுவம், தற்போது நிவாரண கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, காஸா சிட்டியில் தங்கள் நடவடிக்கைகளை விரிவாக்கி, “ஹமாஸ் அமைப்பின் உள்கட்டமைப்புகளைத் தகா்த்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

அந்த நகரில் வசித்துவந்த சுமாா் பத்து லட்சம் பேரில் கணிசமான எண்ணிக்கையிலானவா்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனா். ஆனால், உடல் மற்றும் பொருளாதார பிரச்னை காரணமாக அங்கிருந்து வெளியேற முடியாதவா்களுக்கு இஸ்ரேல் ராணுவத்தின் முன்னேற்றம் பெரும் கிலியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.