;
Athirady Tamil News

பெலாரஸ் எல்லை அருகில் ரஷ்யாவில் அசம்பாவிதம்: தீப்பிடித்து எரிந்த ரயில்

0

ரஷ்யாவில் சரக்கு ரயில் தடம்புரண்டு லொறி மீது மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டது.

சரக்கு ரயில்
பெலாரஸ் எல்லைக்கு அருகிலுள்ள ரஷ்யாவின் ஸ்மோலென்ஸ்க் பகுதியில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது.

அதிகாலையில் கனரக லொறி ஒன்று ரயிலின் முன்னால் தண்டவாளத்தில் சென்றபோது அதன் மீதும் மோதி பாரிய விபத்து ஏற்பட்டது.

இதன் விளைவாக எஞ்சின் மற்றும் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்க் கார்கள் தடம் புரண்டன. இதனால் பல கார்களில் தீப்பிடித்து எரிந்தன.

இந்த பாரிய விபத்தில் ரயில் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் மிதமான காயங்களுக்கு ஆளாகினர். பின்னர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மாஸ்கோ ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், “ரயில் ஓட்டுநர் அவசர பிரேக்குகளைப் பயன்படுத்தினார். ஆனால் போதுமான தூரம் இல்லாததால் மோதல் தவிர்க்க முடியாததாகிவிட்டது” என தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், லொறி ஓட்டுநர் இறந்துவிட்டதாக நம்பப்படுவதாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.