;
Athirady Tamil News

இந்திய மீனவர்கள் 12 பேர் யாழில் இலங்கையில் கைது

0

எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட புதுச்சேரியை சேர்ந்த 12 கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணை நிறைவடைந்தவுடன் குறித்த கடற்றொழிலாளர்களும் அவர்களது படகும் மயிலிட்டி கடற்றொழில் துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.