;
Athirady Tamil News

வடமாகாண மகளிர் தொழில் முனைவோருக்கு உதவி திட்டங்கள்

0

வடக்கு மாகாண மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கான உதவி திட்டங்கள் திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மு. நந்தகோபாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு , உதவி திட்டங்களை வழங்கி வைத்தனர்

அதன் போது, தையல் இயந்திரங்கள் , நீர் இறைக்கும் மின் மோட்டார்கள் , குளிர்சாதன பெட்டிகள் தற்காலிக கடை தொகுதிகள் , கால்நடை வளர்ப்புக்கான உதவி தொகைகள் என வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட மகளிர் தொழில் முனைவோருக்கு உதவி திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.