;
Athirady Tamil News

குளவிக்கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்

0

மஸ்கெலியா – டீசைட் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான மூன்று பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர்களே குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

பெண்ணொருவரும், ஆண் தொழிலாளர்கள் இருவரும் இதில் அடங்குகின்றனர். குறித்த மூவரும் மஸ்கெலியா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டுபேர் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.