;
Athirady Tamil News

நைஜீரியாவில் பெற்றோல் லொறி வெடித்து விபத்துக்குள்ளானதில் 31 பேர் பலி

0

நைஜீரியாவின் மத்திய நைஜர் மாநிலத்தில் பெட்ரோல் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில், குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செயதி வெளியிட்டுள்ளன.

பல்வேறு அளவிலான காயங்களுடன் மேலும் 52 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக நைஜர் மாநில அவசர சேவைத் தலைவர் அப்துல்லாஹி பாபா அரா தெரிவித்துள்ளார்.

நைஜர் மாகாணத்தின் கட்சா பகுதியில் உள்ள வீதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி வீதியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இதனால் டேங்கர் லொறியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறியது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் லொறி வெடித்துச் சிதறியுள்ளது.

இந்த சம்பவத்தில் வீதியின் அருகே நின்றுகொண்டிருந்தவர்கள், வாகனங்களில் பயணித்தவர்கள் என 42 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபரில், வடமேற்கு நைஜீரியாவின் ஜிகாவா மாநிலத்தில் எரிபொருள் லொறி வெடித்ததில் 153 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.