;
Athirady Tamil News

கிளிநொச்சியில் இன்று 42 பேர் அதிரடியாக கைது!

0

கிளிநொச்சியில் நீதிமன்ற கட்டளைகளுக்கு சமூகமளிக்காத 42 சந்தேக நபர்கள் இன்று (4) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கிளிநொச்சி பொலிஸார் மற்றும் தர்மபுர பொலிஸார் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் மூலம் 42 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் இன்றைய தினம் (4) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.