;
Athirady Tamil News

உலகின் முதல் செயற்கை தீவு ; சீனாவின் அதிநவீன ரகசிய திட்டம்

0

சீனா உலகை அதிர்வடைக்கும் வகையில், அணு ஆயுத வெடிப்பான தாக்குதல்களை கூட எதிர்கொள்ளக் கூடிய தொழில் நுட்பமாக மிகுந்த சக்தி வாய்ந்த ஒரு செயற்கை தீவுப் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

இந்த தீவு நகர்த்தக்கூடிய வகைப்படுத்தப்பட்டு, பாதி அளவு நீரில் மூழ்கிய நிலையில் கட்டப்பட உள்ளது.

இந்த தீவுக்கு சுமார் 238 பேர் வரை வாழ்ந்து கொள்ள முடியும். மேலும், வெளியில் இருந்து எந்தவொரு சப்ளையும் இல்லாத சூழ்நிலையிலும் 4 மாதங்கள் வாழும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

அத்துடன் தீவு 6–9 மீட்டர் உயர அலைகளையும் சமாளிக்கக் கூடிய வலிமை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

“மெட்டாமெட்டீரியல்” எனப்படும் பதிப்பிரவிய பொருள் (metamaterial) பயன்படுத்தப்பட்டு, பெரிய அதிர்வுகளைச் சிறியதாக மாற்றும் திறன் கொண்ட தடுப்புகள் கட்டப்பட்டிருக்கிறது.

அனைத்து வகையான தட்பவெப்பச் சூழலைக் கையாளும் ஆழ் கடல் அறிவியல் வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தீவுக்குள் அவசர மின் சப்ளை, தொடர்பு வழிச் சேவைகள், நேவிகேஷன் கட்டுப்பாடு, மற்றும் அணு சக்தி வெடி பாதுகாப்பு போன்ற உயர் தொழில் நுட்ப வசதிகள் உள்ளன.

இது பொதுமக்களுக்கான சிவில் உள்கட்டமைப்பாக இருந்தாலும், அணு வெடிக்கும் சக்தி இருந்தும் தாக்குதலை சமாளிக்கக் கூடிய திறன் கொண்டதாகவே சீன அதிகாரிகள் கூறுகின்றனர். அதன் நீளம் 138 மீட்டரும் அகலம் 85 மீட்டரும் ஆகும்.

திட்ட நிர்வாகி லின் ஷோன்கின் கூறுகிறார்: “2028 ஆம் ஆண்டுக்குள் இந்த தீவு பயன்பாட்டிற்கு தயாராக இருக்கும்.” தென்கிழக்கு ஆழக் கடல் சூழல் மற்றும் வெப்பநிலையை சமாளித்து செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தீவு, சீனாவின் தேசிய பாதுகாப்பிற்கு ஒரு முக்கிய பாகமாக கருதப்படுகிறது. குறிப்பாக, எதிலும் எதிர்ப்பு ஏற்பட்டால் அணு தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் வகையில் இது அமைக்கப்படுகிறது.

சர்வதேச அளவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த செயற்கை தீவு திட்டம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு நோக்கங்கள் இந்த திட்டத்தின் வாயிலாக மேலும் வலுவடைந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.