;
Athirady Tamil News

மண்ணுக்குள் புதைந்த ஐந்து வீடுகள் ; பலர் மாயம்

0

வெலிமடை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ரேந்தபொல பகுதியில் நேற்று (29) இரவு ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 05 பேர் காணாமல் போயுள்ளனர்.

இடிந்து விழுந்த மலைச்சரிவின் கீழ் மேலும் ஐந்து வீடுகளும் சுமார் 10 பேரும் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மீட்புப் பணிகள்
அப்பகுதி மக்கள், பொலிஸார், இராணுவத்தினர் பாதிக்கப்பட்ட 3 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 12 பேரை மீட்டுள்ளனர். அவர்களில், மெக்சிகோவைச் சேர்ந்த ஒருவரும் அர்ஜென்டினாவைச் சேர்ந்த இருவர் அடங்குவர். மேலும், ஒரு சிறுவர் உட்பட 09 உள்ளூர் மக்களும் அடங்குவர்.

இந்த மண்சரிவில் ஐந்து வீடுகளும் சுமார் 05 பேரும் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதோடு, 30 பேர் கொண்ட இராணுவக் குழு தற்போது அந்தப் பகுதிக்குச் சென்று கொண்டிருக்கிறது.

அத்துடன், மக்கள் ஊரை விட்டு வெளியேற முடியாத நிலையில் வீதிகள் மண்சரிவில் புதைந்துள்ளது. மின்சாரம் மற்றும் தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.