;
Athirady Tamil News

லுணுவில பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் ; விமானி உயிரிழப்பு

0

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது இன்று (30) பிற்பகல் லுணுவில பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழந்தார்.

விங் கமாண்டராகப் பதவி வகித்த அவர், மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த விமானி 41 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வென்னப்புவவில் பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது ஏற்பட்ட விபத்தில் இலங்கை விமானப்படை பெல் 212 ஹெலிகாப்டரின் விமானி விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய உயிரிழந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.