;
Athirady Tamil News

மண்சரிவால் சிதைந்து போன தமிழ் குடும்பம் ; பெற்றோரை இழந்து தவிக்கும் பச்சிளம் பெண் குழந்தை

0

நுவரெலியா புரூக்சைட் சென்ஜோன்ஸ் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் தாய், தந்தை உயிரழந்த நிலையில் இரண்டு வயது பெண் குழந்தை உயிர்பிழைத்த சம்பவம் பதிவாகியுள்ளது.

நுவரெலியா புரூக்சைட் சென்ஜோன்ஸ் தோட்டத்தை சேர்ந்த நிக்கலஸ்ராஜா அவரது மனைவி மற்றும் அவரது குழந்தை ஆகியோர் கடந்ந வியாழக்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் அடித்து செல்லப்பட்டனர்.

பிஞ்சு குழந்தை
இந் நிலையில் அவர்களது இரண்டு வயது மதிக்கதக்க குழந்தை உயிருடன் அருகில் உள்ள தோட்டத்தில் மீட்கப்பட்டது. இந்நிலையில் தாயின் உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டதுடன் தந்தையின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

பெற்றோரை பிரிந்து தவிக்கும் பிஞ்சு குழந்தையுடன் குடும்பம் தவித்துக்கொண்டிருக்கின்றது.

குறித்த பெற்றோரின் சடலங்கள் இராகலையில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.