செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என அரசாங்க அதிபர் கோரிக்கை
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் இன்றைய தினம் (01.12.2025) யாழ்ப்பாணம் நகர் பகுதிகள், கே.கே. எஸ். வீதி மற்றும் திருநெல்வேலி கடைகளில் திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும்,அனர்த்த நிலைமைகளை காரணம் காட்டி செயற்கைத் தட்டுப்பாடு மற்றும் பொருட்களுக்கான விலைகளை அதிகரித்து விற்பனை செய்தல் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை இன்றைய தினம் திடீர் பரிசோதனையில் கீரிச்சம்பா அரிசி கடையில் விற்பனைக்காகவிருந்தும், அதனை விற்பனைக்கு மறுத்த கடை உரிமையாளர் மீது நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.