;
Athirady Tamil News

களுவாஞ்சிகுடி சந்தையில் பழுதடைந்த மீன்கள் விற்பனை

0

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி மீன் சந்தையில் இன்று (20) மனித நுகர்வுக்கு ஒவ்வாத பழுதடைந்த நிலையில் விற்பனை செய்யப்பட்ட 16 கிலோ கீரி மீன்கள் கைப்பற்றப்பட்டு பொதுச் சுகாதார பரிசோதகர்களால் உடனே அழிக்கப்பட்டது.

களுவாஞ்சிகுடி பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்றைய தினம் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் மூலம் பழுதடைந்த மீன்கள் கண்டு பிடிக்கப்பட்டது.

இதன் போது பொதுச் சுகாதார பரிசோதகர்களால் வியாபாரிக்கு கடுமையான எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.