;
Athirady Tamil News

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

0

நாட்டில் 2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 300,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி 04ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 317,381 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.

அதிகளவானோர் இந்தியப் பிரஜைகள்
சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியப் பிரஜைகள் என்பதுடன், அவர்களின் எண்ணிக்கை 57,348 எனப் பதிவாகியுள்ளது.

பிரித்தானியப் பிரஜைகள் 34,724 பேரும், ரஷ்யப் பிரஜைகள் 30,951 பேரும், ஜேர்மனியப் பிரஜைகள் 20,272 பேரும் மற்றும் சீனப் பிரஜைகள் 16,315 பேரும் இதில் அடங்குவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பெருமளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், பெப்ரவரி மாதத்தின் முதல் நான்கு நாட்களில் மாத்திரம் 40,054 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.