;
Athirady Tamil News

இஸ்ரேலின் தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள் பலி

0

காசாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று (15.2.2026) காலை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு காசாவில் உள்ள அகதிகள் முகாம் மற்றும் தெற்குப் பகுதியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில், பொதுமக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் இலக்காகின.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு மீறியதால் அதற்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கடந்த ஒக்டோபர் 10 முதல் அமலில் உள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, இதுவரை காசாவில் சுமார் 600 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், காசாவில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான ‘அமைதி சபை’ (Board of Peace) தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டமாக, காசாவின் எல்லைப் பகுதிகளைப் பாதுகாக்கவும், ஹமாஸ் அமைப்பை நிராயுதபாணியாக்கவும் இந்தோனேசியா தனது நாட்டின் 8,000 ராணுவ வீரர்களை அங்கு அனுப்ப முன்வந்துள்ளது.

இந்த அமைதி வாரியத்தின் முதல் அதிகாரப்பூர்வக் கூட்டம் வரும் பெப்ரவரி 19 அன்று வாஷிங்டனில் நடைபெறவுள்ளது.

அதே நேரத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா சென்று ஜனாதிபதி ட்ரம்பைச் சந்தித்து, ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.