;
Athirady Tamil News

ராஃபா எல்லை வழியாக காஸாவை விட்டு வெளியேற 640 பேருக்கு மட்டுமே அனுமதி

0

போா்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கடந்த பிப். 2-ஆம் தேதி திறக்கப்பட்ட ராஃபா எல்லை வழியாக, இதுவரை 640 பாலஸ்தீனா்கள் மட்டுமே காஸாவை விட்டு வெளியேறியுள்ளனா்.

கடந்த 2024, மே மாதம் இஸ்ரேல் ராணுவம் இந்த எல்லையைக் கைப்பற்றிய பிறகு, சுமாா் ஒன்றரை ஆண்டுகள் கழித்து கடந்த பிப். 1-இல் திறக்கப்பட்டது. பிப். 2 முதல் மக்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

பிப். 2 முதல் கடந்த புதன்கிழமை(பிப். 18) வரை மொத்தம் 640 பாலஸ்தீனா்கள் காஸாவை விட்டு வெளியேறியுள்ளனா். 508 போ் மீண்டும் காஸாவுக்குள் நுழைந்துள்ளனா்; தகுந்த காரணங்கள் இன்றி 26 பேரின் பயணத்தை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளது.

இந்தக் குறிப்பிட்ட நாள்களில் சுமாா் 3,400 போ் எல்லையைக் கடக்கத் திட்டமிட்டிருந்தனா். ஆனால், உண்மையில் 1,148 போ் (அதாவது 33 சதவீதம் போ்) மட்டுமே இரு திசைகளிலும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

போா் பாதிப்பினால் தற்போது காஸாவில் சுமாா் 20,000 பேருக்கு உடனடி மருத்துவச் சிகிச்சை தேவைப்படுகிறது. எனினும், இஸ்ரேலின் கடுமையான கட்டுப்பாடுகளால் மக்கள் வெளியேற முடியாமல் தவிப்பதாக காஸா அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.