மொரட்டுவை கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம் ; 3 பெண்கள் கைது
கொழும்பு – மொரட்டுவை, கொரலவெல்ல ஜூபிலி வீதி கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் மொரட்டுவை, கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், உயிரிழந்த பெண்ணுடன் தனிப்பட்ட தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்களிடம், பெண்ணின் மரணம் தொடர்பாக வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன.
தனிப்பட்ட கோபத்தினால் இந்த மரணம் நிகழ்ந்ததா அல்லது கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னரே உறுதிப்படுத்தப்படும் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.