;
Athirady Tamil News

கல்முனை கடற்கரைப் பகுதி சுத்தம் செய்யப்பட்டது.

0

கல்முனை YMCA இன் அனுசரணையுடன் கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் இன்று காலை கல்முனை கடற்கரைப் பகுதி சுத்தம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை மெதடிஸ்த சேகரத்தின் முகாமை குரு அருட்திரு. ரவி முருகப்பிள்ளை மற்றும் அருட் செல்வி சலோஜினி ஆகியோர் கலந்து கொண்டதுடன் திருச்சபையின் மக்களும் இணைந்து கொண்டனர்.

சேகரிக்கப்பட்ட குப்பைகளை அகற்றுவதற்கு கல்முனை மாநகர சபையினால் வாகன ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது

மேலும் குறித்த பணியில் ஈடுபட்டவர்களுக்கு கல்முனை இராணுவத்தினரால் குளிர்பானம் வழங்கி வைக்கப்பட்டது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.