;
Athirady Tamil News

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

0

மத்திய கிழக்கில் போர்ச்சூழல் தணிந்து, உலகச்சந்தையில் எரிவாயு விலைகள் குறைந்தால், நாட்டில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச். வெகபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் நாட்டில் லாஃப்ஸ் எரிவாயுவுக்கு பற்றாக்குறை ஏற்படாது என்றும் அறிவித்துள்ளார்.

எரிவாயு விநியோகப்பணிகள்
நாடளாவிய ரீதியில் தடையின்றி தினசரி எரிவாயு விநியோகப்பணிகள் தற்போது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழலுக்கு மத்தியில், உலகச்சந்தையில் எரிவாயு விலைகள் அதிகரித்ததாலும், போக்குவரத்துச் செலவுகள் உயர்ந்ததாலும் லாஃப் எரிவாயுவின் விலையை உயர்த்த வேண்டியிருந்தது என்று கூறியுள்ளார்.

இருப்பினும், உலகச்சந்தையில் எரிவாயு விலைகள் குறைந்தால், நாட்டில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள எரிவாயு இருப்புகளை நிர்வகித்து, லாஃப்ஸ் எரிவாயுவுக்குப் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.