;
Athirady Tamil News

மொஸாட் அமைப்பிற்கு புதிய தலைவர் நியமனம்

0

இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறை அமைப்பான மொஸாட் இன் புதிய தலைவராக ரோமன் கோஃப்மேன் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் அரசின் ஆலோசனைக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு பிரதமர் நெதன்யாகு, க ரோமன் கோஃப்மேன் மொஸாட் இன் தலைவராக நியமித்துள்ளார்.

இஸ்ரேல் அரசின் முன்னாள் உயர்நீதிமன்றத் தலைவர் தலைமையிலான குழுவால் அங்கிகரிக்கப்பட்ட இந்த முடிவை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் ஜனாதிபதி நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார்.

கோஃப்மேன் துணிச்சலான, சமயோசித புத்தியுடன் செயல்படும் சிறந்த அதிகாரி என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இராணுவச் செயலாளராக பணியாற்றி வரும் கோஃப்மேன் ஜூலை 2, 2026 அன்று உளவுத்துறை தலைவராகப் பதவியேற்கவுள்ளார்.

அடுத்த ஐந்தாண்டு காலம் ரோமன் கோஃப்மேன் இந்தப் பதவியில் இருப்பார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய மொஸாட் இன் தலைவர் டேவிட் பார்னியா பதவிக்காலம் , ஜூன் மாதத்துடன் முடிந்தபின் ரோமன் கோஃப்மேன் பதவியேற்கவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.