;
Athirady Tamil News

செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பித்த பின்னர் செம்மணிக்கு செல்லவுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்

0
செம்மணி புதைகுழி காணப்படும் பகுதியை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பார்வையிட யாழ்.நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியிருந்த போதிலும் அவர்கள், வருகை தரவில்லை.
செம்மணி புதைகுழி பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்திருந்தனர்.

அது குறித்து கடந்த 07ஆம் திகதி நடைபெற்ற செம்மணி புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணையின் போது ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் புதைகுழி பகுதியை பார்வையிட இன்றைய தினம் செவ்வாய்க்கிழமைக்கு மன்று அனுமதித்தது.

அந்நிலையில், அகழ்வு பணிகள் தற்போது நடைபெறாத நிலையில் , புதைகுழி பகுதியை பார்வையிட விரும்பாத காரணத்தால் , அகழ்வு பணிகள் 27ஆம் திகதி ஆரம்பமான பின்னரான ஒரு நாள் அகழ்வு பணிகளை நேரடியாக பார்வையிட கூடியவாறான சூழலில் புதைகுழி பகுதிக்கு விஜயம் செய்ய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தீர்மானித்தமையால் , அவர்கள் இன்றைய தினம் வருகை தரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.