செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பித்த பின்னர் செம்மணிக்கு செல்லவுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்
;
அது குறித்து கடந்த 07ஆம் திகதி நடைபெற்ற செம்மணி புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணையின் போது ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் புதைகுழி பகுதியை பார்வையிட இன்றைய தினம் செவ்வாய்க்கிழமைக்கு மன்று அனுமதித்தது.
அந்நிலையில், அகழ்வு பணிகள் தற்போது நடைபெறாத நிலையில் , புதைகுழி பகுதியை பார்வையிட விரும்பாத காரணத்தால் , அகழ்வு பணிகள் 27ஆம் திகதி ஆரம்பமான பின்னரான ஒரு நாள் அகழ்வு பணிகளை நேரடியாக பார்வையிட கூடியவாறான சூழலில் புதைகுழி பகுதிக்கு விஜயம் செய்ய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தீர்மானித்தமையால் , அவர்கள் இன்றைய தினம் வருகை தரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.