அரசாங்கம் நேர்மையாக செயற்படுவதனால் தான் தூற்றுதலுக்கு இலக்காகிறது
;
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதிய உத்தியோகத்தர்களுக்கு மத்தியில் உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் குறிப்பிடுகையில்:
உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நியமனங்கள் வெறுமனே ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்காக வழங்கப்பட்டவை அல்ல. மாறாக, மக்களுக்குச் சேவையாற்றுவதற்காகவே வழங்கப்படுகின்றன.
அரசாங்க சேவையில் இரு வகையான உத்தியோகத்தர்கள் உள்ளனர். ஒரு தரப்பினர் தங்களை நாடி வரும் பொதுமக்களை எவ்வாறு தட்டிக்கழித்து அலைக்கழிக்கலாம் என எண்ணுவார்கள்.
மற்றையவர்கள், பொதுமக்களுக்கு எப்படியாவது சேவையைச் செய்து கொடுக்க வேண்டும் என்று அர்ப்பணிப்புடன் நினைப்பார்கள். நீங்கள் இந்த இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல், இந்தப் பொறிமுறை முற்றிலும் சுயாதீனமாக இயங்கியமையால்தான் நீங்கள் அனைவரும் இன்று தகுதி அடிப்படையில் நியமனம் பெற்றுள்ளீர்கள். கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
இந்த நியமனங்களுக்கான அனுமதிகள் அவ்வளவு இலகுவாக எமக்குக் கிடைத்துவிடவில்லை.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நேர்மையாகச் செயற்படுவதாலேயே பலரின் தூற்றுதலுக்கு இலக்காக வேண்டியுள்ளது.
எனினும், நேர்மையாகச் செயற்படுவர்களுக்கு அரசாங்கம் எப்போதும் பக்கபலமாக இருக்கும். கடந்த காலங்களில் நியமனங்கள் இலங்கை முழுவதற்குமாக வழங்கப்பட்டன. ஆனால் இப்போது வடக்கு மாகாணத்துக்குள்ளேயே உங்களுக்கு வழங்கப்படுகின்றது.
எனவே, நீங்கள் வடக்கு மாகாணம் முழுவதிலும் எந்தவொரு இடத்திலும் பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும். உங்கள் சேவையின் ஊடாக மக்கள் ஒரு சிறந்த மாற்றத்தை உணர வேண்டும், என்றார்.
இந்நிகழ்வில், வடக்கு மாகாண சபைக்குட்பட்ட திணைக்களங்களில் நிலவிய வெற்றிடங்களுக்காகத் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஆகியோருக்கு உத்தியோகபூர்வமாக நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.