;
Athirady Tamil News

ஈரான் – அமெரிக்கா இடையே பாக். மத்தியஸ்தம் செய்ய வேண்டும்! – சீனா வலியுறுத்தல்!

0

ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய வேண்டுமென சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர்நிறுத்த அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து நடத்திய பாகிஸ்தான் அரசின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, ஈரானிய துறைமுகங்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க படைகள் தொடர்ந்து முற்றுகையிட்டு வந்தன.

இதனால், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய படைகள் முடக்கியதால், பல்வேறு நாடுகள் எரிபொருள் தட்டுப்பாடால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாருடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ செவ்வாய்க்கிழமை (மே 12) அன்று செல்போன் வாயிலாக உரையாடியதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த உரையாடலில், ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாகத் திறப்பதற்கு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தான் மீண்டும் மத்தியஸ்தம் செய்ய வேண்டுமெனவும், பாகிஸ்தான் அரசின் முயற்சிகளுக்கு சீனா ஆதரவளிக்கும் எனவும் வாங் யீ உறுதியளித்துள்ளார்.

இத்துடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (மே 13) மாலை அரசு முறைப் பயணமாக சீனாவுக்குச் செல்வார் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.