;
Athirady Tamil News

தாய்லாந்தில் சுற்றுலா பயணிகள் 60 நாட்கள் விசா இன்றி தங்கும் சலுகை ரத்து

0

பேங்காக்,

தாய்லாந்து நாட்டில் சுற்றுலாத்துறை வளர்ச்சிகாக, இந்தியா உள்பட சுமார் 93 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் 60 நாட்கள் விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்குவதற்கான சலுகை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சுற்றுலா பயணிகளை கவர தாய்லாந்து அரசு வழங்கிய இந்த சலுகை தற்போது அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் அங்கு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இனி சுற்றுலா பயணிகள் தாய்லாந்தில் 30 நாட்கள் மட்டுமே தங்க அந்நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தாய்லாந்து செல்வதற்காக திட்டமிட்டிருந்த சுற்றுலா பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.