;
Athirady Tamil News

ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் – சண்டிலிப்பாயில் நிகழ்வு

0
சமூக சக்தி” ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அங்குரார்ப்பணம்  செய்யப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குற்பட்ட மானிப்பாய் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது மானிப்பாய் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட “வருமானம் குறைந்த 10 பயனாளிகளுக்கு காளான் வளர்ப்புத் திட்டத்திற்கான சான்றிதல் வழங்கி வைக்கப்பட்டதுது.

அத்தோடு காளான் வளர்ப்பு மையத்தின் முதலாவது மையத்துக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.