;
Athirady Tamil News

எரிவாயு விலை திருத்தம் குறித்து லிட்ரோவின் அறிவிப்பு

0

ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் , நாளை மறுதினம் (04) வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் 5 ஆம் திகதி எரிவாயு விலையை திருத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மாதாந்த எரிவாயு விலை திருத்தத்திற்குத் தேவையான அறிக்கைகள் தற்போது நிதி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் இறுதி அறிக்கை நாளை மறுதினம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

உலக சந்தையில் நிலவும் விலை நிலவரங்களுக்கு அமையவே எரிவாயு விலையைத் திருத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை கடந்த மாதம் லிட்ரோ எரிவாயு விலையில் எவ்வித மாற்றத்தை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.