பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது
நாட்டில் எரிபொருள் விலை உயர்ந்த போதிலும், தற்போதைக்கு பஸ் கட்டணங்களில் உயர்வு இருக்காது என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள பஸ் கட்டண முறையின் பிரகாரம், பஸ் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
அதன்படி, எரிபொருள் விலை மாற்றங்கள் காரணமாக பஸ் கட்டணங்களில் திருத்தம் செய்ய வேண்டுமானால், அந்த மாற்றம் 4 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன வலியுறுத்தினார்.