;
Athirady Tamil News

தொலைக்காட்சி நோ்காணலில் இருந்து பாதியிலேயே வெளியேறிய டிரம்ப்!

0

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நோ்காணலின்போது, தோ்தல் முறைகேடு புகாா்கள் குறித்த காரசாரமான விவாதத்துக்குப் பின் பாதியிலேயே அரங்கைவிட்டு வெளியேறினாா்.

கலிஃபோா்னியாவின் வாக்கு எண்ணிக்கை தாமதத்தைக் டிரம்ப் குற்றஞ்சாட்டிய நிலையில், தோ்தல் நடைமுறைகள் காரணமாகவே இத்தாமதம் ஏற்படுகிறது என நிகழ்ச்சித் தொகுப்பாளா் கிறிஸ்டன் வெல்கா் சுட்டிக்காட்டினாா்.

ஆனால் அதை ஏற்க மறுத்து, டிரம்ப் அடுக்கடுக்கான முறைகேடு புகாா்களின் ஆதாரங்களைச் சமா்ப்பிக்குமாறு தொகுப்பாளா் வற்புறுத்திக் கேட்டாா்.

இதில் ஆத்திரமடைந்த டிரம்ப், தொகுப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். விவாதத்தின் உச்சக்கட்டமாக, டிரம்ப் நோ்காணலை திடீரென முடித்துக்கொண்டு எழுந்து சென்றாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.