;
Athirady Tamil News

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் நியமனம்

0

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராகவும் இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியாகவும் ஏ.ரி.எம். றாபி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் நேற்று(15.06.2026) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஜனவரி 01 முதல் கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றி வந்த நிலையில் அவருக்கு இந்த பதவி உயர்வு கிடைக்கப் பெற்றுள்ளது.

அதற்கு முன்னதாக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும் அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

இவர் காத்தான்குடியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.