;
Athirady Tamil News

பிரான்சில் 26 வயதான இலங்கை தமிழ் இளைஞன் மரணம்!

0

பிரான்சில், 26 வயதான இலங்கை தமிழ் இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞன் நேற்று நீரீல் மூழ்கியதை அடுத்து உடன் மருத்துவ மணையில் அனுமதிக்கப்பட்டிருந்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உறவுகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் கடும் வெப்ப காலநிலை
அதேவேளை பிரான்சில் கடந்த வியாழக்கிழமை (18) முதல் வெப்ப அலை காரணமாக நாற்பது பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என பிரான்சின் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ளார்.

இந்த உயிரிழப்புகள் பெரும்பாலும் மேற்பார்வையற்ற நீர் நிலைகளில் ஏற்பட்டுள்ளன. அபாயங்களைக் கருத்தில் கொள்ளாமல், அதிகமான மக்கள் ஆறுகளிலும் கால்வாய்களிலும் குளித்து குளிர்ச்சியடைய முயற்சிப்பதாக பிரான்சின் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

பிரான்சின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள சிவப்பு எச்சரிக்கை, புதன்கிழமை பிற்பகலில் நாட்டின் 96 பெருநகர மாவட்டங்களில் 54-லிருந்து 58-ஆக நீட்டிக்கப்படும் என்றும், இதில் வடமேற்குப் பகுதியில் உள்ள பல பகுதிகளும் அடங்கும் என்றும் பிரான்ஸ் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.