;
Athirady Tamil News

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

0

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மாகாணங்கள் மற்றும் புத்தளம், அம்பாந்தோட்டை, மன்னார், திருகோணமலை மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (09.07.2026) காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, நாளை (10) காலை 11.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு
தீவிரமான தென்மேற்குப் பருவமழை நிலவுவதால் மத்திய, சபரகமுவ, வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம், அம்பாந்தோட்டை, மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் மேலதிக அறிவுரைகளைக் கவனத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.