;
Athirady Tamil News

நீர் விநியோக துண்டிப்பு வாரம் பிரகடனம் ; நீர் கட்டணம் செலுத்தாதவர்களின் கவனத்திற்கு

0

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், நீர் கட்டண நிலுவைகளை அறவிடுவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, 2026 ஜூலை 13 முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதி ‘நீர் விநியோக துண்டிப்பு வாரமாக’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நீர் கட்டண நிலுவை
இந்த விசேட நடவடிக்கை பிரதானமாக சில குறிப்பிட்ட பகுதிகளை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய, கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையான அனைத்துப் பகுதிகள், மகரகம மற்றும் கோட்டை வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த திட்டம் அமுலாகவுள்ளது.

தங்களுடைய நீர் விநியோகம் தடையின்றித் தொடர்வதற்கு, நீர் கட்டண நிலுவைகளை 2026 ஜூலை 13 ஆம் திகதிக்கு முன்னதாக செலுத்தி முடிக்குமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நுகர்வோருக்கு அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட திகதிக்கு முன்னதாக நிலுவைத் தொகைகளைச் செலுத்துவதன் மூலம், ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்த்து ஒத்துழைப்பு வழங்குமாறும் நீர் வழங்கல் சபை மேலும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.