;
Athirady Tamil News

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு ஈராண்டு சிறை!

0

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யோலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந் நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை (13) தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசியல் தரகர் ஒருவரிடமிருந்து 270 மில்லியன் வோன் (1,79,800 டொலர்) மதிப்புள்ள கருத்துக்கணிப்புச் சேவைகளைச் சட்டவிரோதமாக இலவசமாகப் பெற்ற குற்றத்திற்காக முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யோலுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பின்படி, அரசியல் தரகர் ஒருவரிடமிருந்து 14 முறை இலவசமாக கருத்துக்கணிப்பு சேவைகளைப் பெற்றதன் மூலமும், அவருக்குப் பிரதிபலனாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வேட்பாளர் நியமனத்தில் செல்வாக்கு செலுத்தியதன் மூலமும் யூன் அரசியல் நிதி தொடர்பான சட்டங்களை மீறியுள்ளதாக சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

Politics எனினும், அந்தக் குற்றச்சாட்டுகளை யூன் மறுத்துள்ளதாகவும், இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய முடியும் எனவும் கூறப்படுகின்றது. அதேவேளை 65 வயதான முன்னாள் ஜனாதிபதி யூன் மீது எட்டு சட்டரீதியான வழக்குகள் உள்ளன.

2024-ல் அவர் குறுகிய காலத்திற்கு அமுல்படுத்திய ராணுவச் சட்டத்துடன் தொடர்புடைய கிளர்ச்சிக்குத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, பெப்ரவரி மாதம் அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து அவர் தற்போது மேல்முறையீடு செய்து வருகிறார்.

முன்னாள் ஜனாதிபதி கைது செய்வதற்கான அதிகாரிகளின் முயற்சியைத் தடுத்ததற்காக அவருக்கு விதிக்கப்பட்ட ஏழு ஆண்டு சிறைத்தண்டனையை உறுதிசெய்து கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.