வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை ஏழாம் திருவிழா இடம்பெற்றது.
ஏழாம் திருவிழாவின் போது , வேல் பெருமான் காராம்பசு வாகனத்திலும், வள்ளி தெய்வானை ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி , பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் , தொடர்ந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.