;
Athirady Tamil News

வவுனியா ஆனந்த இல்லத்து அன்னையர்களுடன், பிறந்தநாளைக் கொண்டாடினார் சுவிஸ் அஜீகன்.. (வீடியோ படங்கள்)

0

வவுனியா ஆனந்த இல்லத்து அன்னையர்களுடன் பிறந்தநாளைக் கொண்டாடினார் சுவிஸ் அஜீகன்.. (வீடியோ படங்கள்)
#################################

சரவனை மேற்கு வேலணையைச் சேர்ந்தவரும், சுவிஸ் சார்கன்ஸ் பகுதியில் வசிப்பவருமான தோழர் மோகன் என அழைக்கப்படும் பற்பநாதன் அருட்சோதி தம்பதிகளின் செல்வப் புதல்வன் அஜீகன் தனது இருபத்தோராவது பிறந்த தினத்தை தனது தாயகப் பகுதிகளில் பல்வேறு சமுகப் பங்களிப்புகள் மூலம் இன்றையதினம் கொண்டாடினார்.

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் வவுனியா. மணிப்புரத்தில் அமைந்துள்ள அன்னையர் இல்லத்தில் வாழும் அன்னையர்களோடு பிறந்தநாள் பாடல் இசைத்து, கேக் வெட்டி விசேட உணவு வழங்கி மிகஆனந்தமாக தனது இருபத்தோராவது பிறந்த நாளை மிக இனிமையாக கொண்டாடினார் அஜீகன்.

இந்நிகழ்வில் அஜீகன் அவர்கள் தற்போது சுவிஸில் உள்ள காரணத்தினால், தற்போது விடுமுறையில் இலங்கை வந்துள்ள அவர்களது தந்தையாரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது

சுவிஷ் நாட்டில் பிறந்து வளர்ந்த அஜீகன் தன் தாய் நாட்டின் உதவி தேவையுடைய மக்களுக்கு சேவை செய்யும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சேவைகளை பார்த்து தனது பிறந்தநாளையும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக இவ்வாறான தேவையுடையவர்களுக்கு சேவை செய்யும் பணியை செய்ய வேண்டுமென விரும்பி கேட்டுக் கொண்டதற்கிணங்க “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” அஜீகன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தது.

வழமைபோலவே ஆனந்த இல்லத்து அன்னையர்களோடு தொடர்ந்து பயணிக்கிறது “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” என்பது குறிப்பிடத்தக்கது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.

24.03.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.