இலங்கையில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்குன்குனியா வைரஸ் நோய் பெரிய அளவில் பரவி வருகிறதாக பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார். ஒக்ஸ்போர்ட் நானோபோர் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட மரபணு ஆராய்ச்சியில் இவ்விடயம் வெளிப்பட்டுள்ளதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார். இலங்கையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு பரவும் நோய்! | Chikungunya In Sri Lanka After 16 Years 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்குன்குனியா வைரஸ் தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, தற்போது பரவி வரும் சிக்குன்குனியா வைரஸ் இந்து சமுத்திரத்தில் பரவக் கூடிய வைரஸ் பரம்பரையைச் சேர்ந்தது. முதியவரால் பதின்மவயது சிறுமி கர்ப்பம்; தமிழர் பகுதியில் சம்பவம் முதியவரால் பதின்மவயது சிறுமி கர்ப்பம்; தமிழர் பகுதியில் சம்பவம் இது பல தனித்துவமான பிறழ்வுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை தற்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து ஒரு பெரிய சிக்குன்குனியா பரவலை எதிர்கொண்டு வருகிறது. மக்கள் எதிர்ப்பு; நல்லூர் கந்தன் வளாக அசைவ உணவத்தில் அதிரடி மாற்றம்! மக்கள் எதிர்ப்பு; நல்லூர் கந்தன் வளாக அசைவ உணவத்தில் அதிரடி மாற்றம்! தற்போது பரவி வரும் சிக்குன்குனியா வைரஸ் பிரழ்வின் முழு மரபணு ஆய்வினை நாம் மேற்கொண்டோம். அது தெற்காசியாவில் தற்போது பரவி வரும் ஊர்ஐமுஏ பிரழ்வைப் போலவே இந்து சமுத்திர பரம்பரையைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிந்துள்ளோம். இலஞ்ச பணத்தை பங்கிடும் அரச நிறுவனங்கள் ; வெளியான அதிர்ச்சி தகவல் இலஞ்ச பணத்தை பங்கிடும் அரச நிறுவனங்கள் ; வெளியான அதிர்ச்சி தகவல் இந்த புதிய பிறழ்வுகளில் சில முன்னர் வகைப்படுத்தப்படாததால், அவை கொசுக்களுக்குள் உடற்தகுதி, வைரஸ் பிரதிபலிப்பு மற்றும் நோயெதிர்ப்புத் தவிர்ப்பை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் கண்டறிவது முக்கியமானதாகும் எனவும் பேராசிரியர் நீலிகா மாலவிகே குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிசார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் அதிகளவான ஐஸ் போதைப்பொருளை உட்கொண்ட காரணத்தால் இளைஞன் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த (22) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அதிகளவான போதைப்பொருள் பாவனை
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் 10 ஆம் வட்டாரம் எனும் இடத்தில் நண்பர்கள் மூவர் ஐஸ் போதைப்பொருள் பாவித்து வந்துள்ளார்கள்.
இதில் ஒருவர் அதிகளவான ஐஸ் போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் மயங்கி விழுந்ததை அடுத்து ஏனைய இருவரும் அப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளார்கள்.
இதனையடுத்து பற்றைகாட்டுக்குள் ஒருவர் மயங்கி கிடப்பதாக தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் மயங்கிய நிலையில் உள்ளவரை மீட்டு புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றுபோது அங்கு அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது,
சம்பவத்தில் 23 வயதுடைய 10ம் வட்டாரத்தினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
. அதேவேளை புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் அதிகளவான போதைப்பொருள் பாவனை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றதாக சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.