;
Athirady Tamil News

வேலணை “அமரர் சரஸ்வதி” அம்மாவின் இறுதி கிரியையை முன்னிட்டு வாழ்வாதார உதவி.. (வீடியோ, படங்கள்)

0

வேலணை “அமரர் சரஸ்வதி” அம்மாவின் இறுதி கிரியையை முன்னிட்டு வாழ்வாதார உதவி.. (வீடியோ, படங்கள்)
###################################
யாழ் வேலணையில் பிறந்து கனடாவில் வாழ்ந்துவந்த திருமதி ஆறுமுகம் சரஸவதி அவர்கள் கனடாவில் காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்றைய நாளில் கனடாவில் இடம்பெற்று இறுதியாத்திரை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தாயக உறவுகளுக்கு வாழ்வாதார உதவியாக நாளாந்த வருமானத்தை இழந்து வாழும் குடும்பங்களுக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” உலருணவுப் பொதிகளை வழங்க அன்னையின் உறவுகள் முன்வந்துள்ளனர்.

யாழ் வேலணையில் பிறந்து, கனடாவில் அமரத்துவமடைந்த அமரர் திருமதி ஆறுமுகம் சரஸ்வதி அவர்களுக்கு, இன்றையதினம் இறுதிக்கிரியை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அவரது பிள்ளைகளில் ஒருவரான “சாந்தா” என அழைக்கப்படும் திருமதி சரோஜாதேவி குடும்பத்தினர், அதாவது மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவுகள் சார்பாக.. சுவிஸில் வசிக்கும் திரு.திருமதி.”ராசன்” என அழைக்கப்படும் இராசகுலசிங்கம் .”சாந்தா” என அழைக்கப்படும் சரோஜாதேவி குடும்பம் வழங்கிய நிதிப் பங்களிப்பில்.. வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அமரர் ஆறுமுகம் சரஸ்வதி அன்னையின் ஆத்ம சாந்திபெற இறைவன் சந்நிதியில் அமைதியாக அமைதி கொள்ள இறுதி நிகழ்வு நடைபெறும் நாளில் பல்வேறு வகையில் வருமானத்தை இழந்து, வாழ்வதற்கு மிகவும் சிரமப்படும் வவுனியா புதியகோயில்குளம், .செக்கட்டிப்புலவு, கற்பகபுரம், சிவபுரம் கிராமங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் செயலாளருடன், உப செயலாளர் திருமதி பெரியண்ணன் பரிமளா,முன்பள்ளி ஆசிரியை திருமதி வேஜினி ஆகியோர் கலந்து கொண்டு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

உணவுப் பொதியினை பெற்றுக் கொண்டவர்கள் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.. “தங்களது அன்னையின் பிரிவுத் துயரிலும், அன்னையின் மறுவாழ்வு அமைதியாய் இறைவனோடு ஐக்கியமாகி அமைதி கொள்வதற்காக இந்த உதவியை எமக்கு தந்துள்ளனர். நிச்சயமாக நாங்களும் இறைவனே வேண்டுகிறோம் . எங்கள் வயிறு நிறைந்த்து போல், இந்த உதவிகளை வழங்கிய சுவிஸ்வாழ் ராசன் என அழைக்கப்படும் இராசகுலசிங்கம் அவர்களுக்கும், அவரது மனைவியும் சரஸ்வதி அம்மாவின் மகளுமான சாந்தா என அழைக்கப்படும் சறோஜாதேவி அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.அதேவேளை அம்மாவின் ஆத்மசாந்திக்காக இறைவனை வேண்டுகிறோம்”.. என்றனர்.

இன்றைய நாளில் கனடாவில் இறுதி யாத்திரை செல்லும் அன்னை ஆறுமுகம் சரஸ்வதி அவர்களின் ஆத்மா இறைவனோடு ஐக்கியமாகி நித்திய பெருவாழ்வில் அமைதியாக இளைப்பாறி, இறையோடு இரண்டரக் கலந்து பேரின்ப பெறுவாழ்வு பெற “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தாயக உறவுகளோடு எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

03.08.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.