;
Athirady Tamil News

கனடா “கொலம்பியா ராஜாவின்” பிறந்தநாளில், தாலிக்குளம் கிராமத்தில் வாழ்வாதார உதவிகள்.. (வீடியோ படங்கள்)

0

கொலம்பியா ராஜாவின் பிறந்த தினத்தில், தாலிக்குளம் கிராமத்தில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
#################################

யாழ் நாரந்தனையைச் சேர்ந்தவரும் கனடாவில் வாழ்பவருமான கொலம்பியா ராஜா என பிரபலமாக அறியப்பட்ட திரு.அரங்கநேசன் பரம்சோதி அவர்களின் பிறந்தநாளை (01.08) முன்னிட்டு, இன்று தாயக உறவுகளோடு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு மிக விமர்சையாக வவுனியா மன்னார்வீதி தாலிக்குளம் கிராமத்தில் கொண்டாடப்பட்டது.

கனடா “நம் தாயகம்” குழுமத்தின் உரிமையாளர்களின் ஒருவரும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் கனடா கிளையின் இணைப்பாளர்களின் ஒருவருமான “சமூகநேயன்” குணராஜா உதயராஜா அவர்களின் நண்பரும், ஊடகத்துரையினைச் சார்ந்தவரும், தமிழ்த் தேசிய கொள்கையின் தீவிர பற்றாளருமான “கொலம்பியா ராஜா” எனும் திரு.அரங்கநேசன் பரம்சோதி அவர்களது பிறந்த தாள் நிகழ்வினை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வவுனியா மன்னார் வீதி தாலிக்குளம் கிராமத்தில் “மன்றத்தின் கிராமிய இணைப்பாளர்” திருமதி றமணி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டடு, சிறுவர் சிறுமியர் அடங்கலாக பெரியோர்களும் அதிகளவாக கலந்து கொண்டு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

தமிழரது தேசிய விடுதலை சார்ந்து தனது ஆத்மார்த்த ரீதியாக புலம்பெயர் தேசங்களில் ஆர்வத்துடன் குரல் கொடுத்து வரும் தேசிய பற்றாளரும் யதார்த்தமான உரிமைப் போராளியுமான கொலம்பிய ராஜா என பரவலாக அறியப்பட்ட அழைக்கப்பட்ட திரு.அரங்கநேசன் பரம்சோதி அவர்களின் பிறந்த நாள் கேக் வெட்டப்பட்டு பிறந்த நாள் பாட்டுப் பாடி வருகை தந்தோர் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கி “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” தாலிக்குளம் கிராமத்தில் கொண்டாடப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் விசேட தேவைக்குரிய குடும்பங்கள் என குடியிருப்பு அமைக்கப்பட்டது. இந்த கிராமத்தில் வாழும் குடும்பங்களில் ஒருவர் ஏதோ ஒருவகையில் உடலியல் குறைபாடு உள்ள ஒருவராக இருப்பார். அவ்வாறு காணப்படும் குடும்பங்களை தேர்வு செய்து மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் செயலாளர் உட்பட உப செயலாளர் திருமதி பெரியண்ணன் பரிமளம், மன்றத்தின் கிராமிய இணைப்பாளர் திருமதி றமணி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

அவ்வாறு உதவி பெற்றோர் சார்பாக கொலம்பியா ராஜா அவர்களுக்கு நன்றி தெரிவித்து, வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் கொலம்பியா ராஜா அவர்களை பல்லாண்டு பல்லாண்டு காலம் நொய்நொடியின்றி வாழ வேண்டும் ன தாயக உறவுகளுடன் இணைந்து வாழ்த்துகிறது.வாழ்த்துகிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

03.08.2021

https://studio.youtube.com/video/7v4UZ3AMd94/edit

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.