;
Athirady Tamil News

நீர்வேலி திருமதி தயாளினியின் (சுவிஸ்) பிறந்தநாளில் பல்வேறு உதவிகள்.. (வீடியோ, படங்கள்)

0

நீர்வேலி திருமதி தயாளினியின் (சுவிஸ்) பிறந்தநாளில் பல்வேறு உதவிகள்.. (வீடியோ, படங்கள்)

யாழ். நீர்வேலியில் பிறந்து வாழ்ந்தவரும், சுவிஸ் பேர்னில் வசிப்பவருமான சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத் தொண்டருமான திருமதி.தயாளினி குணரட்ணம் அவர்களின் ஐம்பதாவது “பொன்விழா” பிறந்ததினம் இன்றாகும்.

திரு.திருமதி. குணரெட்னம் குடும்பத்தினர் தமது குடும்ப நிகழ்வுகள் அனைத்தையும் இன, மத, பிரதேச வேறுபாடுகள் இன்றி பல்வேறு வாழ்வாதார உதவிகளை தாயக மக்களுக்கு வழங்கி வருபவர்கள். அதுவும் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக பல்வேறு வாழ்வாதார உதவிகள், கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்வுகளை வழங்கி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இன்றையதினம் ஐம்பதாவது “பொன்விழா” பிறந்தநாளைக் கொண்டாடும் திருமதி.தயாளினி குணரட்ணம் அவர்கள் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை “சக்தி இல்ல மாணவிகள்” அனைவருக்கும் (சுமார் ஐம்பது பெண் பிள்ளைகளுக்கான) “புத்தாடைகள்” வழங்கி கொண்டாடினார்.

நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக “திருமதி.தயாளினி குணரட்ணம்” அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கேக்வெட்டி, பிறந்தநாள் பாட்டுப்பாடி மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். இதன் பின்னர் மேற்படி “சக்தி இல்ல மாணவிகள்” அனைவருக்கும் “புத்தாடைகள்” வழங்கி வைக்கப்பட்டதுடன் அனைவருக்குமான விசேட உணவும் வழங்கப்பட்டது.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு மேற்படி நிகழ்வானது மேற்படி “சக்தி மகளிர்” இல்ல தலமைப் பொறுப்பாளரும், மண்முனை தென்மேற்கு பிரதேசசபை (கொக்கட்டிச்சோலை) தவிசாளருமான திரு.புஷ்பலிங்கம் அவர்களின் தலைமையில், மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச தவிசாளர் திரு.சண்முகராஜா விருந்தினராகக் கலந்து சிறப்பிக்க நடைபெற்றது.

இவர்களுடன் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சார்பில், மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச உபதவிசாளரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினரும், உபதலைவர்களில் ஒருவருமான திரு.பொன் செல்லத்துரை (தோழர்.கேசவன்) அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

இன்றையதினம் தனது ஐம்பதாவது “பொன்விழா” பிறந்தநாளைக் கொண்டாடும் மேற்படி சுவிஸில் வசிக்கும் நீர்வேலியைச் சேர்ந்த திருமதி.தயாளினி குணரெட்னம் அவர்களை “சக்தி மகளிர் இல்ல” சிறுமிகள், மற்றும் தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாழ்த்தி சந்தோஷமடைவதுடன், நிதிப்பங்களிப்பு வழங்கிய சுவிஸில் வசிக்கும் திரு.திருமதி. குணரெட்னம் குடும்பத்துக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

16.03 2022.

நீர்வேலி திருமதி தயாளினியின் (சுவிஸ்) பிறந்தநாளில் பல்வேறு உதவிகள்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.