;
Athirady Tamil News

“நாட்டுப் பற்றாளர்” அமரர்.மாதர் செல்லத்துரை அவர்களின் நினைவாக வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)

0

“நாட்டுப் பற்றாளர்” அமரர்.மாதர் செல்லத்துரை அவர்களின் நினைவாக வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)

“நாட்டுப் பற்றாளர்” அமரர்.மாதர் செல்லத்துரை அவர்களின் நினைவாக அவரது இன்றைய திதி தினத்தை முன்னிட்டு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது..

யாழ் .அச்சுவேலியைச் சேர்ந்தவர்களும் சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் தூண் பிரதேசத்தில் வசிப்பவர்களுமான திருமதி கேமேஸ்வரி சுபாஸ்கரன் (ராஜு) அவர்கள் தனது தந்தையாரான ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்ட “நாட்டுப் பற்றாளர்” அமரர்.மாதர் செல்லத்துரை அவர்களின் நினைவாக அவரது இன்றைய திதி தினத்தை முன்னிட்டு விசேட மதிய உணவினை அவரது அச்சுவேலியில் உள்ள இல்லத்தில் அவரது குடும்ப உறவுகளால் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்றுமாலை வன்னி எல்லைக் கிராமமொன்றில் அரிசிப் பொதிகள் தேங்காயுடன் வழங்கி வைக்கப்பட்டது. தமிழ் தேசியத்தின் ஈடுபாட்டில் செயல்பட்ட காரணத்தினால் ஆயுததாரிகளினால் மரணித்த “நாட்டுப்பற்றாளர்” அமரர்.மாதர் செல்லத்துரை அவர்களின் “திதி நாள் நினைவாக” மேற்படி வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

“மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” நாட்டுப் பற்றாளர் அமரர் மாதர் செல்லத்துரை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரது நினைவாக இன்றைய பொருளாதார இக்கடடான சூழ்நிலையில் வாழும் பல்வேறு குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை அமரர் செல்லத்துரை அவர்களின் மகளும் சுவிஸ் பேர்ண் தூண் மாநிலத்தில் வசிக்கும் திருமதி கேமேஸ்வரி சுபாஸ்கரன் (ராஜு) அவர்களின் நிதிப் பங்களிப்பில் வழங்கப்பட்டது.

“மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” இன, மத, பிரதேச வேறுபாடுகளை மட்டுமல்ல அரசியல் வேறுபாடுகளையும் கடந்து நடுநிலைமையுடன் அனைத்து மக்களையும் வாழ்வாதாரத்தில் முன்னேறவும், மாணவ மாணவிகளின் கல்விக்கு கரம் கொடுக்கவும் வேண்டுமெனும் ஒரே நோக்கில் செயல்பட்டு “தடைகளைத் தகர்த்து சமூகத்தை உயர்த்து” எனும் குறிக்கோளில் செயலாற்றுவது நீங்கள் அறிந்ததே..

தொடர்ந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தோடு நிதிப்பங்களிப்பு தந்து சமூகப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் திரு.திருமதி. சுபாஸ்கரன் (ராஜு) கேமேஸ்வரி தம்பதிகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தாயக சொந்தங்களோடு இணைந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, இறையடி சேர்ந்த அமரர் மாதர் செல்லத்துரை அவர்களின் ஆத்மா சாந்தியடைய எந்நாளும் இறையவனை இறைஞ்சு வேண்டுகிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

31.05.2022

“நாட்டுப் பற்றாளர்” அமரர்.மாதர் செல்லத்துரை அவர்களின் நினைவாக வாழ்வாதார உதவிகள்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.