;
Athirady Tamil News

தாயக உறவுகளோடு பிறந்த நாளைக் கொண்டாடினார், லண்டன் மதுரன் கருணைலிங்கம்.. (வீடியோ, படங்கள்)

0

தாயக உறவுகளோடு பிறந்த நாளைக் கொண்டாடினார் லண்டன் மதுரன் கருணைலிங்கம்.. (வீடியோ, படங்கள்)

லண்டனில் பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வன் கருணைலிங்கம் மதுரன் அவர்களுக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும், லண்டனில் அமரத்துவமடைந்தவர்களுமான, அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் பரம்பரையில் வந்துதித்த வழித்தோன்றல்களில் ஒருவரும், லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகசபை செயலாளரும், சமூக, சமயத் தொண்டருமான பெருமதிப்புக்குரிய கண்ணன் ஐயா என அன்புடன் அழைக்கப்படும் திரு.திருமதி.கருணைலிங்கம் ஆனந்தி தம்பதிகளின் ஏகபுதல்வன் செல்வன்.மதுரன் அவர்களின் இன்றைய பிறந்தநாளை தாயக உறவுகளோடு கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப்பாடி மிக இனிமையாக கொண்டாடப்பட்டது.

அத்துடன் மட்டுமல்லாது செல்வன் மதுரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் பெற்றோரின் நிதிப் பங்களிப்பில் மாலைநேர வகுப்புகளுக்கு செல்வோருக்கான கற்றலுக்கான உதவியாக அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வழங்கப்பட்டது. அத்துடன் செல்வன்.மதுரன் அவர்களின் இன்றைய பிறந்தநாள் நினைவாக பயன்தரு தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

முதலில் செல்வன் மதுரனின் பிறந்தநாள் கொண்டாட்டம் வன்னி எல்லைக் கிராமமொன்றில் சிறுவர்களால் கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப் பாடி விமர்சையாக கொண்டாடப்பட்டது. பல சிறுவர் சிறுமியர்கள், அவர்களின் பெற்றோர், அக்கிராமத்தவர்களென பலரும் கலந்து கொண்டு செல்வன்.மதுரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார்கள்.

நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்களுக்கு உட்பட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது. அத்துடன் கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகளும் பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

அதேபோல் இன்றுமாலை பிறிதொரு கிராமத்தில் மாணவ மாணவிகள், கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொள்ள மாணவ மாணவிகளுக்கான மாலைநேர வகுப்புக்கு செல்வோருக்கான கற்றல் உபகரணங்களாக அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டதுடன், அக்கிராமத்தில் வாழும் தேவையுடைய மக்களுக்கு பயன்தரு தென்னை மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இன்றைய நாளில் லண்டன் மாநகரில் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வன் மதுரன் கருனைலிங்கம் அவர்களுக்கு “பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென” தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு,

செல்வன்.மதுரன் அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு அவரின் பெற்றோர்கள் வழங்கிய நிதிப்பங்களிப்பில் கற்றலுக்கான உதவியாக அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பிறந்தநாள் நினைவாக பயன்தரு தென்னை மறக்க கன்றுகளும் வழங்கி வைத்தமைக்காகவும் மதிப்புமிகு நன்றியினையும் தாயக சொந்தங்களோடு இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

12.09.2022

தாயக உறவுகளோடு பிறந்த நாளைக் கொண்டாடினார் லண்டன் மதுரன் கருணைலிங்கம்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.