;
Athirady Tamil News

புங்குடுதீவு கனடா ராஜாவின் பிறந்தநாளில் பல்வேறு உதவிகள்.. (படங்கள், வீடியோ)

0

புங்குடுதீவு கனடா ராஜாவின் பிறந்தநாளில் பல்வேறு உதவிகள்.. (படங்கள், வீடியோ)
§§§§§§§§§§§§§§§§

ராஜா எனும் திரு.குணராஜா உதயராஜா

“தேசியத்தின் வலி செல்லும் தமிழன்
ஆசியாவைக் கடந்த ஆணழகன்
தாய் நாட்டில் நடந்த போரினால்
பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு,
ஊன்றுகோல் கொடுக்க
“நம் தாயகம்” அமைத்த செம்மல்,

பம்பலாக பலதும் பத்தும் கதைத்தாலும்
தமிழ் பாரம்பரியம் பேணும் பண்பாளன்..

புங்கை மண்ணில் பிறந்து, கனடாவில்..
அகவை காணும் நன்னாளில் பொங்கு தமிழால்
பூச்சூடி வாழ்த்துவோம் ராஜாவை..
இனிய பிறந்த வாழ்த்துக்களால் மாலையிட்டு..

கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவான புங்குடுதீவைச் சேர்ந்த உதயன் அல்லது ராஜா என அன்புடன் அழைக்கப்படும், திரு.குணராஜா உதயராஜா அவர்களின் இன்றைய பிறந்ததினம் வவுனியா வீரபுரம் கிராமத்தில் மிகவும் சந்தோஷமாகக் கொண்டாடப்பட்டது.

இதன் முதல் நிகழ்வாக பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள், அவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் ஆகியோர் “திரு.உதயராஜாவின்” பிறந்தநாளை முன்னிட்டு கேக்வெட்டி, பிறந்தநாள் பாட்டுப்பாடி மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வானது “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களின் நேர்த்தியான ஒழுங்கமைப்பில், புளொட் அமைப்பின் மூத்த போராளியான தோழர்.ஜெஸ்மின் அக்கா எனும் திருமதி ஜெயபாலினி ஹென்றிபெரேரா அவர்களின் தலைமையில் மிக சிறப்பாக இந்நிகழ்வு நடந்தது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், திரு.உதயராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது விருப்பத்துக்கு இணங்க கலந்து கொண்ட அனைவருக்கும் விசேட அசைவ மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டதுடன், நிகழ்வில் கலந்து கொண்டோரின் குடும்ப உறவுகளும், அவர்களின் குடும்பத்துக்கும் உணவுப் பொதிகளாக வழங்கி வைக்கப்பட்டது சிறப்பான செயல்பாடாகும்.

மேற்படி நிகழ்வானது “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளரும், புங்குடுதீவை சேர்ந்தவரும், கனடாவில் வசிப்பவருமான “சமூக தொண்டன்” திரு.குணராஜா உதயராஜா அவர்களின் பிறந்ததினம் என்பதினால் “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” நிர்வாக சபையின் நிதிப் பங்களிப்பில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இதனைத் தொடர்ந்து இன்றைய நாட்டின் இக்கட்டான சூழ்நிலை, பொருளாதார பின்னடைவு போன்றவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” ஆரம்பிக்கப்பட்டுள்ள “உமா கிராம எழுச்சி வீட்டுத் தோட்ட” நிகழ்வுக்கு உதவும் முகமாக மரக்கறி வகைக் கன்றுகளும், நாத்துகளும், பயன்தரு நல்லின தென்னை மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டு, கச்சான் நாத்து வகைகளும் நாட்டப்பட்டு இன்றுமாலை இரண்டாவது நிகழ்வாக நடைபெற்று அக்கிராம மக்கள் மகிழ்ச்சியடைய வைக்கப்பட்டனர்.

இன்றையதினம் பிறந்தநாள் காணும் மாணிக்கதாசன் நற்பணி மன்ற சர்வதேச ஒருங்கிணைப்பாளர் திரு.குணராஜா உதயராஜா அவர்களின் முழுமையான நிதிப் பங்களிப்பில் புளொட் செயலதிபர் உமா மகேஸ்வரனின் பிறந்த தினத்தின் போது, ஆரம்பிக்கப்பட்ட “உமா கிராம எழுச்சி வீட்டுத் தோட்டத்தை” தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில் இன்றையதினம் மூன்றாம் கட்டமாக இந்நிகழ்வு நடைபெற்றது.

முதலில் அந்நிகழ்வில் கலந்து கொண்ட கிராம மக்களின் குழந்தைகள் திரு.உதயராஜாவின் இன்றைய பிறந்தநாளை முன்னிட்டு இங்கும் கேக்வெட்டி, பிறந்தநாள் பாட்டுப்பாடி மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். அத்துடன் அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து, சிறப்பம்சமாக உழவு இயந்திரத்தின் மூலம் நிலங்கள் பதனிடப்பட்டு இவ்வீட்டுத் தோட்ட நிகழ்வு மூன்றாம் கட்டமாக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வானது “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களின் நேர்த்தியான ஒழுங்கமைப்பில், மன்றத்தின் கிராமிய இணைப்பாளர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது. மேற்படி நிகழ்வுக்கான முழுமையான நிதிப் பங்களிப்பை கனடாவில் இருந்து திரு.திருமதி உதயராஜா ரதீஸ்வரி குடும்பத்தினர் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

நான்கு தினத்துக்கு முன்னர் கனடாவில் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடிய திரு.குணராஜா உதயராஜா அவர்ககளின் மகனான செல்வன் நிலவன் உதயராஜா அவர்களும் இதுபோன்ற உதவிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்…

இன்றைய காலத்தின் தேவை கருதி கிராமம் தோறும் “உமா கிராம வீட்டுத் தோட்டத்தை” உருவாக்கி மக்களின் எதிர்கால வாழ்வுக்கு உதவிட வேண்டுமெனும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் முயற்சிக்கு புலம்பெயர் நாடுகளில் தமது நிகழ்வுகளை நடத்துவோரும் தொடர்ந்து உதவி வருவது மிகவும் சிறப்பம்சமாகும்.

நிகழ்வுகளில் கலந்து கொண்டோரினால் இன்றைய நாளில் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் திரு.உதயராஜாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

அந்தவகையில் இவருக்கும் தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ச்சியாக தாயக உறவுகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக நிதிப் பங்களிப்பினை வழங்கி வருவதற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி மன்றம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

10.03 2023

புங்குடுதீவு கனடா ராஜாவின் பிறந்தநாளில் பல்வேறு உதவிகள்.. (வீடியோ)

“உமா வீட்டுத் தோட்ட” உதவியுடன், புங்குடுதீவு கனடா நிலவன் அவர்களின் பிறந்தநாளில் பல்வேறு உதவிகள்.. (படங்கள், வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.