;
Athirady Tamil News

நாவற்குழியில் வீடு உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது!!

0

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவற்குழி பகுதியில் வசிக்கும் அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டை பட்டப்பகலில் உடைத்து 7 பவுண் நகையை திருடி சென்று இருந்தனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் , யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தது வந்த நிலையில் , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வீடு உடைத்து திருடிய குற்றத்தில் இருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் திருடப்பட்ட நகையையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.