புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயிலில் நடந்தது என்ன? நடப்பது என்ன?? கோயில் நிர்வாக முக்கியஸ்தரின் விசேட செவ்வி..

எமது ஊரினதும், கண்ணகை அம்மன் கோயிலினதும் மானம், மரியாதை, அவற்றின் வளர்ச்சி கருதி கோயில் நிர்வாகத்துக்கு எதிராக செயல்படுவோர், ஆர்ப்பாட்டம் செய்தோர் ஆகியோரில் சிலர் எம்முடன் உரையாடியதை அடிப்படையாகக் கொண்டு *புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயில் நிர்வாகத்தில் உள்ள முக்கியஸ்தர்களில் (ஐவரில்) ஒருவருடன் எமது இணையம் சார்ந்து ஊடகவியலாளர் ஒருவர் கண்ட செவ்வி இது..
நிருபர்..- வணக்கம் ஐயா, உங்கள் ஊரில் உள்ள அதாவது நீங்கள் முக்கிய பொறுப்பில் உள்ள புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயில் நிர்வாகம் சார்ந்து சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு உள்ளது, இதுகுறித்து உங்கள் கருத்தை அறிய விரும்புகிறோம்.
கோயில் நிர்வாக முக்கியஸ்தர்.. – வணக்கம், நீங்கள் தாராளமாகக் கேட்கலாம் நான் பதில் சொல்லத் தயார்.
நிருபர்..- கோயிலில் நடந்த களவு, அதில் சம்பந்தப்பட்டவரை நிர்வாகம் காப்பாற்ற முனைந்தமை, இதுகுறித்து கேட்டவர்கள் மீது வழக்குத் தொடர்ந்தமை குறித்து உங்களின் அபிப்பிராயம்?
கோயில் நிர்வாக முக்கியஸ்தர்.. – வணக்கம் தம்பி நாங்கள் கோவிலில் நடந்த எந்த ஒரு களவையும் மறக்க வேண்டிய அவசியம் இல்லை, அங்கு கோயிலில் அதாவது கோவிலில் வேலை செய்தவர் ஊடாகத் தான் நாம் களவு நடந்தது அறிந்தோம். அக்களவை அவரே தானே ஒத்துக் கொண்டு அதாவது தனது தவறை ஏற்றுக் கொண்டு இருந்தார். அதுக்கு அவரிடம் அவரது நண்பராக அங்கு தொழில் புரிந்த இன்னும் ஒருவர் இது பிழை, காசை திருப்பிக் கொடு என்று கூறி அந்தப் பணம் போலீசில் பணமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது ஆயினும் அக்களவை நாம் ஏற்றுக் கொள்ளாமல் அவரை வேலையில் இருந்து நிறுத்தி உள்ளோம், அதேபோன்று அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் அதை சமாளிக்க நினைத்தது உண்மை அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை, காரணம் அது ஊரின் மனமும், கோயிலின் மானமும் போகும் என்பதை கருத்தில் கொண்டு தான்,
ஆயினும் வெளிநாட்டில் என்று வந்தவர்கள் இருவர் உட்பட மற்றும் நம் கொழும்பில் வசிக்கும் வர்த்தகர்கள் உட்பட இன்னும் ஊரில் உள்ளவர்கள் என்று சுமார் 5, 6 பேர் அதனை ஒரு பிரச்சினையாக எடுத்த பின்பாகவே நாங்கள் இப்பொழுது சட்ட முறைப்படி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம், அதைகூட எமது ஆலய குருக்கள்தான் செய்திருந்தார்
அதன் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஒரு வாரத்தின் பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டது, ஆயினும் நாம் மீண்டும் கோவிலில் வேலைக்கு அமர்த்த வில்லை இதுவே உண்மையான நிலைமை.
நிருபர்..- நன்றி ஐயா ஆனாலும் ஒருவர் களவு செய்திருந்தால் அவர் மீது ஆலய நிர்வாகம் வழக்கு தாக்கல் செய்வதா? அன்று ஆலய குருக்கள் வழக்கு தாக்கல் செய்வது சரியா என்பதை இப்போது ஆர்ப்பாட்டம் அல்லது கோயில் நிர்வாகத்துக்கு எதிரானவர்களின் கேள்வியாக உள்ளது இது குறித்து உங்களின் பதில் என்ன??
கோயில் நிர்வாக முக்கியஸ்தர்.. – இல்லையே தம்பி அப்போது அதாவது திருவிழா நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் கோயிலுக்கு முழு பொறுப்பாக அமைந்திருக்கும் ஐயா அவர்கள் தான், ஆகவே அவர் ஊடாகத்தான் அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதே நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு அதில் எந்தவித மாற்று கருத்தும் நாம் வைக்க வேண்டிய அவசியமில்லை
நிருபர்..- வணக்கம் அப்படியாயின் அதே குருக்கள் ஐயா ஊடாக தன்னை மிரட்டியதாக அதே குருக்கள் ஐயா வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் இருவர் உட்பட சுமார் ஆறு பேர் மீது வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? அதற்குரிய காரணம் என்ன??
கோயில் நிர்வாக முக்கியஸ்தர்.. – தம்பி அவர்கள் எல்லோருக்கும் எதிராக அந்த வழக்கு மட்டும் போடவில்லை அவர்கள் கோயில் அலுவலகத்துக்கு அத்துமீறி நுழைந்தது, அலுவலக அனைத்து உடைமைகளையும் போட்டோ எடுத்தது, அலுவலகத்தில் வேலை செய்த பெண்ணை வீடியோ எடுத்தது, மற்றும் அங்கு உள்ள கோயில் அலுவலகத்தில் இருந்த அலுமாரிகளையும் லாட்சிகளையும் திறந்து அடாவடித்தனமாக புகைப்படம் எடுத்தது, கணக்கு வழக்கு புத்தகங்களை புகைப்படம் எடுத்தது, அங்கு இருந்தவர்களை கண்டபடி பேசியது மற்றும் மிரட்டியது என்று மூன்று நான்கு வழக்குக்கு மேல் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது இதுதான் உண்மை.
நிருபர்..- அதேவேளை ஐயா உங்களிடம் இன்னும் ஒரு கேள்வி நீங்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் கடவுச்சீட்டை முடக்கி அவர்களின் பயணத்தை தடை செய்து ஒரு கேலிக்கூத்தாக்கியது போன்று பலரும் கருதுகிறார்கள் இது உங்களுக்கு நியாயமாகப்படுகின்றதா ஐயா?
கோயில் நிர்வாக முக்கியஸ்தர்.. – மன்னிக்கவும் தம்பி இதற்கும் எமக்கும் சம்பந்தமில்லை, நாம் வழக்கு தொடுக்க வேண்டியது மட்டுமே எமது கடமை, மேலதிகமாக நீதவான் அதாவது நீதிமன்றம் எடுத்த முடிவுகளுக்கு நாம் கட்டுப்பட்டோம் நாம் சரி அவர்களது சரி இதுவே நடைபெற்ற உண்மை தம்பி
நிருபர்..- வணக்கம் ஐயா நீங்கள் கோவிலின் கணக்கு வழக்கு பகிரங்கத்தில் இதுவரை காட்டவில்லை எனவும் அதனாலேயே இவ்வளவு பிரச்சினை வந்தது என்றும் வரவு செலவு கணக்கு எங்கே என்றே அவர்கள் கேட்கிறார்கள் இது குறித்து நீங்கள் கூற விரும்புவது என்ன??
கோயில் நிர்வாக முக்கியஸ்தர்.. – அப்படி இல்லை தம்பி நாம் வருடா வருடம் கூடும் நமது கூட்டத்தின் போதும் அந்த கணக்கு வழக்கு நாங்கள் சமர்ப்பித்து உள்ளோம், காசு தந்தவர்களுக்கும் அதாவது கோவிலை கட்டுவதற்கு காசு தந்தவர்கள் நம் திருவிழா செய்பவர்கள் மற்றும் சந்தா கட்டுபவர்கள் கோவிலுக்கு என உதவி செய்பவர்கள் என அனைவருக்கும் நாம் கணக்கு வழக்கு சமர்ப்பித்து உள்ளோம் இது தெரியாமலே சிலர் விதண்டாவாதம் செய்கிறார்கள்
நிருபர்..- அப்படியாயின் வேலணை பிரதேச சபையின் உங்கள் நிர்வாக உறுப்பினர்களை அதாவது ஆர்ப்பாட்டம் செய்தவர்களுடன் இணைந்து கதைப்பதற்கு கணக்கு வழக்குடன் வரும்படி கூறியும் நீங்கள் அங்கு செல்லாமல் தயங்கினீர்கள், அல்லது செல்லாமல் விட்டதன் காரணம் என்ன? இது எந்த வகையில் நியாயம் என நீங்கள் நினைக்கின்றீர்கள்??
கோயில் நிர்வாக முக்கியஸ்தர்.. – அப்படி இல்லை தம்பி அதாவது வேலணை பிரதேச சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கும் கோயில் நிர்வாகத்துக்கும் எந்தவித சம்பந்தமில்லை, அவர்களுக்கு கணக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை, அதனாலேயே நாம் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து நாம் பிரதேச செயலாளர் திரு சிவகரண் அவர்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்தி உள்ளோம்.
நிருபர்..- அப்படியாயின் அடுத்த சனிக்கிழமை உங்கள் கோவிலில் முன்னால் ஆர்ப்பாட்டம் அதாவது போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார்கள் இதுகுறித்து நீங்கள் கூற விரும்புவது என்ன??
கோயில் நிர்வாக முக்கியஸ்தர்.. – இது ஓர் ஜனநாயக நாடு இங்கு யாரும் எந்தொரு போராட்டமும் செய்வதற்கு அவர்களுக்கு அனுமதி உண்டு. அவர்கள் அமைதி வழியிலும் செய்யலாம், கூப்பாடு போட்டு ஆர்ப்பாட்டம் போராட்டமும் செய்யலாம், அதை பற்றிய நமக்கு எந்த வித அக்கறையையும் இல்லை.
நிருபர்..- அப்படியாயின் பிரதேச சபையில் அதாவது பிரதேச செயலாளர் உங்களை இதுவரை அழைக்கவில்லையா? அவருக்கு நீங்கள் தெரிவிக்க விரும்புவது என்ன??
கோயில் நிர்வாக முக்கியஸ்தர்.. – தம்பி நாங்கள் எமது வேலணைப் பிரதேச செயலாளரிடம் எமது கோவில் கணக்கு வழக்கு அறிக்கையையும், கூட்ட அறிக்கையையும் இன்று இல்லாட்டில் நாளை ஒப்படைக்க உள்ளோம், அதனை அவர் சரிபார்த்து அதிலிருந்து பிழை இருந்தால் எம்மிடம் தெரிவிப்பார். சரி இருந்தால் அவர்களிடம் அதாவது ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் என்று கூறுபவர்களுடன் தனது கருத்தை சொல்வார் கணக்கு வழக்கு நாம் பகிரங்கத்தில் அவர்கள் நிர்வாகத்தில் இல்லாதவர்களுக்கு அதுவும் கோயிலுக்கென எந்தவொரு நிதிப் பங்களிப்பு வழங்காதவர்களுக்கு கோயில் கணக்கு வழக்கைக் காட்ட வேண்டிய அவசியமில்லை.
நிருபர்..- நீங்கள் அதாவது கோவில் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் பல கோடி மோசடி அன்றில் ஊழல் செய்துள்ளதாக குற்றச்சாட்டப்படுகிறது இதுகுறித்து நீங்கள் கூற விரும்புவது என்ன??
கோயில் நிர்வாக முக்கியஸ்தர்.. – தம்பி நாங்கள் எந்த ஒரு பண மோசடியில் எமது நிர்வாகத்தை சேர்ந்த எவரும் ஈடுபடவில்லை, முதலில் இக்கோயிலை முப்பது கோடியளவில் கட்டுவத்துக்கே தீர்மானித்த்தோம், ஆயினும் கொரோனாக் காலத்தில் ஏற்பட்ட பலமடங்கு விலையேற்றம் காரணமாக நாங்கள் இதுவரை சுமார் 83 கோடியளவில் இக்கோயிலைக் கட்டுவதுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதுவரை நமக்கு வரவாக வந்துள்ளது சுமார் 67 கோடி அதனால் 16 கோடிக்கு மேல் எமக்கு மேல் அதிக செலவாக செலவழிக்கப்பட்டுள்ளது, இது தெரியாமல் சிலர் தேவையற்ற கதைகளை கதைக்கிறார்கள்.
நிருபர்..- இதேவேளை கோயிலின் தலைவர் மற்றும் உப செயலாளர் மீது மட்டுமே எதிர்தரப்பு குற்றச்சாட்டு வைக்கிறது, இதற்குரிய காரணம் என்ன? இதன் பின்னணி என்ன??
கோயில் நிர்வாக முக்கியஸ்தர்.. – அவர்கள் இருவர் மட்டுமே முக்கியமாக இந்த நிர்வாகத்தையும் தாண்டி முக்கியமாக பல கோடிக்கணக்கான பணங்களை சேர்த்தவர்கள், இந்த கோவிலை கட்டி எழுப்புவதற்கும் மிகவும் உதவியாக இருந்தவர்கள் அதன் பொறாமைத்தனமே இந்த கேவலமான குற்றச்சாட்டுக்கள்,
இதேவேளை இந்த குற்றச்சாட்டுகளை முன் வைப்பவர்கள் தற்போது நிலுவையில் உள்ள சுமார் 16 கோடிக்கு மேற்பட்ட பணத்தை மற்றும் பின்னால் இன்னும் கட்டப்பட வேண்டியுள்ள விடயங்களை செய்வார்களா? அப்படியாயின் தாராளமாக அவர்கள் வரலாம், முன் வரவேண்டும் என்பதே எமது விருப்பம், முன் வரட்டும் நாம் வரவேற்கிறோம்.
நிருபர்..- நன்றி உங்களுடைய பதிலுக்கு.. இன்னும் அவர்கள் முன் வருவதற்கு தயாராக இருந்தாலும் நீங்கள் புங்குடுதீவில் உள்ள கோவில் நிர்வாக கூட்டத்தை புங்குடுதீவில் கூட்டாமல், எதற்காக கொழும்பில் கூட்டுகின்றீர்கள், அதனாலே தம்மால் முடியாமல் உள்ளதென அவர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள் இது குறித்து நீங்கள் கூற விரும்புவது என்ன??
கோயில் நிர்வாக முக்கியஸ்தர்.. – தம்பி நாங்கள் இதே கோவிலில் அதாவது புங்குடுதீவில் ஒரு கூட்டத்தை கூடினால் 15, 20 பேர் கூட வரமாட்டார்கள், ஆயினும் நாங்கள் கொழும்பில் கூட்டும் போது கோவிலை சேர்ந்தவர்கள் கோவில் நிர்வாகிகள், கோயிலுக்காக உதவி செய்பவர்கள், கோயில் சேர்ந்தவர்களென சுமார் சுமார் 70 தொடக்கம் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அந்த கூட்டத்துக்கு வருகிறார்கள். ஒரு உதாரணத்துக்கு இங்கு அதாவது கோவிலில் நடக்கும் பூசைக்கு எவருமே பெரும்பாலும் வருவதே இல்லை, தினந்தோறும் நடக்கும் பூசைக்கு 15, 20 ம் சில நாள் ஒரு 50 பேர் தான் வருகின்றார்கள் அதுவும் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே வருகின்றார்கள் இதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நிருபர்..- நன்றி ஐயா நீங்கள் இவ்வளவு நேரம் தந்த செவ்விக்கு நன்றி ஆயினும் இறுதியாக ஒரு கேள்வி இப்பிரச்சினைக்கு உங்கள் சார்ந்து அல்லது கண்ணகி அம்மன் கோவில் சார்ந்து அன்று நிர்வாகம் சார்ந்து நீங்கள் எடுக்கும் இறுதி முடிவு அதாவது என்ன மாதிரியாக இந்த பிரச்சினை தீர்க்கப் போகின்றீர்கள்??
கோயில் நிர்வாக முக்கியஸ்தர்.. – நன்றி தம்பி அவர்கள் இலங்கை வேலணைப் பிரதேச சபையில் மட்டுமில்லை இலங்கை அரசின் இந்து சமய கலாச்சார அமைச்சிலும் முறைப்பாடு செய்துள்ளார்கள் அவர்களும் எழுத்து மூலம் கேட்டுள்ளார்கள் அவர்களுக்கும் நாங்கள் பதில் அளித்துள்ளோம். அவர்களின் ஆலோசனப்படி அதாவது இலங்கை அரசின் இந்து சமய கலாச்சார அமைச்சின் ஆலோசனைப்படியும் அறிவுரையின்படியும் நாம் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் என்பதை உலகெங்கும் வாழும் அனைத்து புங்குடுதீவு உறவுகளுக்கும் உங்கள் மூலம் அறிவிப்பதில் மகிழ்வடைகிறோம்.. நன்றி தம்பி..