;
Athirady Tamil News

ஜீ7 மாநாட்டை முன்னிட்டு கனடாவில் டிரம்ப் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரம்

0

ஜீ7 மாநாட்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

“கனடா அமெரிக்காவின் 51வது மாநிலம் ஆகும்” என்ற டிரம்பின் அண்மைய கருத்துக்கு எதிராக, சிலர் பதாகைகளை ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

டிரம்ப் இங்கே வரக் கூடாது எனவும் அவரை நாங்கள் விரும்பவில்லை எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

G7 உச்சி மாநாடு அல்பெர்டாவின் கனனாஸ்கிஸில் நடைபெறவுள்ள நிலையில், பங்கேற்க வந்த உலகத் தலைவர்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர் அமைப்புகள், இளைஞர்கள், பூர்வகுடி மக்கள், சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் இதில் இணைந்து கொண்டிருந்தனர்.

டிரம்ப் கால்கரி விமான நிலையத்தில் தரையிறங்கினார், பின்னர் ஹெலிகாப்டரில் மாநாட்டு இடத்திற்கு பயணித்தார். அவர் கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் திங்களன்று சந்திப்பு நடத்த உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.